சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2023-05-14 17:44 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் சாலை வசதி ஏற்படுத்தும்போது, மின் கம்பத்தை ஓரமாக அமைக்காமல் நடு ரோட்டிலேேய வைத்து சாலை அமைத்துள்ளனர். மின்கம்பத்தை சாலையோரம் அமைக்கக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் இன்னும் மாற்றி அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் சாலையின்நடுவே உள்ள மின்கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர். 

மேலும் செய்திகள்