சாலையோர ஆபத்தான கிணறு

Update: 2025-06-22 13:01 GMT

காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் வடுகன்குட்டை சாலையோரம் தடுப்புச்சுவர் இன்றி காணப்படும் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணறு சாலையின் அருகே உள்ளதால் இரவில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கிணற்றில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டும்.

-வெங்கடேசன், காட்பாடி. 

மேலும் செய்திகள்

சாலை பழுது