காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் விரிவாக்கப்பணி, சாலையோரம் வடிகால் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியால் கல்புதூர் -காட்பாடி சாலையில் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெரு முனையில் ஒரு ஆள் உயர ஆழத்துக்கு ஆபத்தான பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்கள் கடந்த நிலையில் கால்வாய் பணி முடிக்கப்படாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?
-பி.துரை, கல்புதூர்.