சாலை தடுப்புகளை அகற்றும் பொதுமக்கள்

Update: 2023-05-28 17:15 GMT

வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் இரும்புத்தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் அந்தந்த ஊர் கிராமத்துக்குச் செல்வதற்காக சாலையில் இருந்த இரும்புத்தடுப்புகளை சிலர் அகற்றி வழி ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அந்தப் பகுதிகளில் வழிகளை அடைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்