சிமெண்டு சாலை அமைத்துத்தர வேண்டும்
கணியம்பாடி அருகில் உள்ள சிங்கிரிகோவில் நரசிம்மர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலையொட்டி புதிதாக பாலம் கட்டி உள்ளனர். பாலத்தைக் கடந்து கோவிலை வரை செல்ல சாலை சரியாக இல்லை, கருங்கல் ஜல்லி பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் வரை சிமெண்டு சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவிகா, ரத்தினகிரி