சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-05-14 17:05 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள வேலூர்-ஆரணி மெயின்ரோட்டில் இருந்து 2 கிேலா மீட்டர் தூரத்தில் நாகநதி வடகரையில் அத்திமலைப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊரில் அக்ரஹார தெருவில் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. பள்ளமான இடங்களில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால்வாய் வசதியோடு சிமெண்டு அல்லது தார் சாலை அமைக்க வேண்டும்.

-மகாராஜன், அத்திமலைப்பட்டு. 

மேலும் செய்திகள்