திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு அருகில் நெடுஞ்சாலைத்துறையில் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. அந்த வழியாக இரவில் வாகனங்களில் வருவோர் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. அந்தப் பள்ளத்தால் விபத்துகளும் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீர் செய்ய முன்வர வேண்டும்.
-மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.