குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-04 17:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் புதிய காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக காட்சி அளிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ கூட சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தில் சாலையை சீர் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

-த.பா.யுவராஜ், வெங்களாபுரம். 

மேலும் செய்திகள்