குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-03 16:39 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் வரும் பக்தர்கள் பூத நாராயணர் கோவில் வழியாக வந்து வட ஒத்தவாடை தெரு வழியாக ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் வட ஒத்தவாடை தெரு சாலை குண்டும், குழியுமாக பெயர்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் அந்தப் பகுதி குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அருணாசலம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்