பழுதான சாைல

Update: 2023-04-05 16:49 GMT

செய்யாறு தாலுகாவில் பலாந்தாங்கல் கிராமம் உள்ளது. அங்குள்ள சாலை ஆரணி-தேவிகாபுரம், ஆரணி-சேத்துப்பட்டு, ஆரணி-வந்தவாசி செல்லும் இணைப்பு சாலையாகும். இந்தச் சாலை பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கிராமம் செய்யாறு தாலுகாவில் கடைசி கிராமம் என்பதால் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கண்டு கொள்வது இல்லை. பழுதான சாலையால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை அகற்றி விட்டு புதிதாக தார் சாலை போட வேண்டும்.

-பொதுமக்கள், பலாந்தாங்கல்.

மேலும் செய்திகள்