தினத்தந்திக்கு பாராட்டு

Update: 2023-05-24 13:55 GMT

அரக்கோணம் சுவால்பேட்டையில் பிரதான சாலையான திருத்தணி ரோடு மற்றும் மேற்கு ஒப்பணக்கார தெரு ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு பள்ளத்தை மூடாமல் இருப்பது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-ராஜாமணி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்