மேம்பாலம் கட்ட வேண்டும்

Update: 2022-12-28 12:32 GMT

தக்கோலம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தக்கோலம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள ஒரு தரைப்பாலத்தில் மழைக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பாக உள்ளது. மழை வெள்ளம் அதிகமாக வந்தால் போக்குவரத்து முற்றிலும் தடைபடும். அந்த வழியாக வேலைக்கு செல்வோர், ஆம்புலன்ஸ் செல்ல ஒரே தரைப்பாலம் உள்ளது. ஆற்றில் அதிகமாக வெள்ளம் வந்தாலோ அல்லது தரைப்பாலம் சேதம் அடைந்தாலோ காஞ்சீபுரம் சென்று தான் செல்ல வேண்டும். அந்தத் தரைப்பாலம் அருகில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி. 

மேலும் செய்திகள்