சாலையின் நடுவே பள்ளம்

Update: 2024-02-25 17:14 GMT

வேலூர் செங்காநத்தம் மலைக்கு செல்லும் வழியில் மூலக்கொல்லை பகுதியில் உடைந்து கிடக்கும் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தின் மேல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து ஏதும் நடக்காமல் இருக்க கல்லை வைத்துள்ளனர். அந்த வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் சாலையில் ஆங்காங்கே இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரமான சாலையை அமைத்து அந்தப் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், செங்காநத்தம். 

மேலும் செய்திகள்