வழியில் தோண்டப்பட்ட பள்ளம்

Update: 2022-11-06 12:42 GMT

திருப்பத்தூர் நகராட்சி 30-வது வார்டு பகுதிறில் சிவசக்தி நகர் உள்ளது. இப்பகுதியையொட்டி உள்ள புதுப்பேட்டை ரோடு ரெயில்வே தரைப் பாலத்தின் வழியாக ஏரி நீர் செல்வதை தடுப்பதற்காக சிவசக்தி நகர் வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழியை நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்லக்கூட வழி இல்லாமல் தவித்து வருகிறனர். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வழி இல்லாமல் நகராட்சியால் தோண்டப்பட்ட பள்ளத்தை தாண்டி செல்லும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பாதை வசதியை உடனே ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிரவன், சிவசக்தி நகர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்