மக்களை பயமுறுத்தும் மரண பள்ளம்

Update: 2023-01-08 16:47 GMT

காட்பாடி காந்திநகரில் உள்ள சட்டக்கல்லூரி, பி.எம்.கல்லூரிக்கு செல்லும் சாலையின் நடுவே (கூட்டுறவு வங்கி எதிரே) பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தை மறைப்பதற்காக குப்பை கூளங்களை போட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்வோர் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். மக்களை பயமுறுத்தும் மரணப்பள்ளத்தை மூட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-டி.கே.செல்வராசு, காட்பாடி. 

மேலும் செய்திகள்