ஆபத்தான பள்ளம்

Update: 2024-09-15 20:17 GMT

காட்பாடி வஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள பள்ளிக்கூட தெருவில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் நடந்து செல்ல கான்கிரீட் மூலம் சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளது. அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், வஞ்சூர்.

மேலும் செய்திகள்