ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-16 17:06 GMT

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 ஆவின்‌ அலுவலகம் அருகே சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு பள்ளம் சீரமைக்கப்பட்டது. அந்தப் பள்ளத்தில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் விட்டு விட்டனர். அந்த வழியாக இரவில் நடமாடும் கால்நடைகள், மனிதர்கள் தவறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். இந்தப் பள்ளம் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்தச் சாலையோரம் இருக்கும் ஆபத்தான பள்ளத்துக்கு சிமெண்டு சிலாப் மூடி போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-தி.திராவிடன், சத்துவாச்சாரி, வேலூர். 

மேலும் செய்திகள்