குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-08 12:56 GMT

திருச்சி மாவட்டம், திருவரங்கம் தாலுகா, மணிகண்டம் கிராமம், அக்ரஹாரத் தெருவில் கடந்த 10  ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள்  சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு  கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்