அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், உஞ்சினி அம்பேத்கர் நகரில் குண்டும், குழியுமாக இருந்த சாலை தார்சாலையாக மாற்றுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை தார்சாலை அமைக்கப்படாமல் தற்போது மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது புழுதி பறப்பதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.