தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஆண்டித்தெரு சிறு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.