போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-08-11 12:51 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கல்வி நிலையங்களும் உள்ளன. இந்த பகுதியின் சாலையின் வழியாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், பாபநாசம், குடவாசல், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்