தெரு ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி

Update: 2022-08-10 12:37 GMT
மயிலாடுதுறையில் காமராஜர் பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்த 2 பஸ் நிலையங்களுக்கும் வண்டிக்கார தெரு வழியாக சென்று வரமுடியும். மேலும் வண்டிக்கார தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் இந்த தெருவில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இந்த தெருவில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் விளம்பர பதாகைகள், கடையில் உள்ள பொருட்களை வைத்துள்ளனர். இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்