புதர் மண்டி காணப்படும் தகனமேடை

Update: 2022-08-07 14:51 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்கம் ஊராட்சி வாடா மங்கலம் கிராமம் உள்ளது. கிராமத்தில் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மண் பாதை வழியாக சென்று வருகின்றனர். இந்தப் பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை மிகுந்த சிரமத்துடன் சேற்றில் சுமந்து கொண்டு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். சுடுகாட்டில் தகனம் மேடை செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தருவதோடு, செடி, கொடிகளை அகற்றி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்