மழைநீர் அகற்றப்படுமா?

Update: 2022-07-27 15:48 GMT
திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே லைன் தெரு உள்ளது. இந்த தெருவுக்கு செல்லும் பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அந்தப் பாதையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியள்ளதால் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் குடியிருப்பு வாசிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் எனவே இந்த பிரச்சினையை  தீர்த்து வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்