திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த சித்தன் வாழுர் அருகே நத்தம் கிராமம் உள்ளது . இந்த கிராம மக்களின் வசதிக்காக வெட்டாற்றுக்கரையோரத்தில் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், விவசாய பணிகளுக்கு வாகனங்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?