புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-05-21 13:32 GMT

பெரம்பலூர் காமராஜர் வளைவில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை அமைக்கப்பட்டிருந்த தார்சாலை மிகவும் சிதிலம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்