மயிலாடுதுறை மாவட்டம் பெரியகண்ணாரதெரு பகுதியில் உள்ள சாலை நடுவே பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தினால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே பள்ளத்தினை மூட நடவடிக்கை எடுப்பார்களா?