விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா செட்டியார்பட்டி பேரூராட்சி 10-வது வார்டு காசிராஜா நாடார் தெரு, முகவூர் தளவாய்புரம் மெயின் ரோட்டில் உள்ள வாருகாலில் கழிவுநீர் தேங்கி வெளியேறி சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் நடைபாதையினரும், வாகனஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே வாருகாலை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.