ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-20 10:03 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சி காமராஜபுரத்தில் வளப்பாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். தற்போது இந்த பாலத்தின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்து பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த பாலத்தின் வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்