விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில்வே கேட் பகுதியிலிருந்து ரெயில் நிலையம் வழியாக பஸ் நிலையம் செல்லும் சாலையானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.