சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-09 10:40 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் வடக்கு தெரு கிராம சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள்,பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்