பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் முன்பு செயல்பட்டு வந்த தாலுகா அலுவலக கட்டிடம் வழியாக குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள் பயன்படுத்தும் இந்த சாலை பெயர்ந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.