சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-25 14:25 GMT

மங்கைநல்லூர் பஜார் பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குண்டும்,குழியுமான சாலையினால் வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை வசதி