சாலையில் உள்ள பள்ளங்கள் சீர்செய்யப்படுமா?

Update: 2022-09-10 15:27 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி அலுவலகத்திற்கு பின்பகுதியில் எம்.எம். நகர் மற்றும் வெங்கடாஜலபதி நகர் குடியிருப்புகள் உள்ளன. இதில் எம்.எம்.நகர் குடியிருப்பிற்கு செல்லும் பிரதான சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளங்களாகி, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்