சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஏத்தமுத்துக்கண்மாய்-திராணி சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.