புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மறவன்பட்டி விலக்கு சாலையில் இருந்து கருப்பகோன் தெரு கிராமம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவரச தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி பள்ளங்களில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.