குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-09-04 12:47 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர்-திட்டச்சேரி இடையே உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.  இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்