சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வழியாக திருச்சி- பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த சாலையில் வேகத்தடைகள் அதிகமாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். இந்த வேகத்தடைகளை இணைப்பு சாலையில் அமைத்தால் வாகனஓட்டிகளுக்கு உதவிகரமாக இருக்கும். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.