கரூர் மாவட்டம், புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சி, பெரியவரத்துப்பாளையம் பகுதியிலிருந்து ஊராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கி.மீ. வரை உள்ள தார் சாலை சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.