சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடை அருகே விருச்சுழி ஆற்றுப்பாலத்தின் இருபக்கவாட்டிலும் தடுப்பு சுவர் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் அச்சஉணர்வுடனே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் சிலர் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புசுவர் அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.