மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருவாலி ஊராட்சியில் உள்ள கீழச்சாலை மேலத்தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்கள் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?