அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் பஞ்சாயத்துக்குட்ட பொட்டக்கொல்லை கிராமத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.