வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-22 13:32 GMT
தஞ்சை மாவட்டம் கொல்லைக்காடு கடைத்தெருவில் இருந்து திருச்சிற்றம்பலம் வழியாக செல்லும் சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் அந்த சாலையில் முறையான வேகத்தடைகள் இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்