மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் இருந்து பெரிய கோவில் வரை செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?