தார்சாலை வேண்டும்

Update: 2022-08-21 13:07 GMT

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் மின் நகர், மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அலுவலகம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் உள்ளன. எளம்பலூர் ஊராட்சி எல்லைக்குள் உள்ள இந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரிகள் பெரம்பலூர் பஞ்சாயத்திற்கு தவறாமல் கட்டி வருகிறோம். மழை பெய்தால் இப்பகுதியில் உள்ள மண்சாலைகள் சேரும் சகதியுமாக மாறிவிடுகின்றன. ஆகவே இப்பகுதியில் மண்சாலைகளை தார் சாலைகள் அல்லது கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்