காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஸ் நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் வெயில் காலங்களில் நிலைமை இன்னும் மோசமடைகிறது. எனவே முதியவர்கள் மற்றும் பெண்களின் நலன் கருதி பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைத்து தர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.