ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக பனைக்குளம், மேலசெல்வனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.