வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-08-20 14:42 GMT
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். காலை நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கின்றனர். மேலும் கடைகளுக்கு செல்வதற்கும் சாலையை கடக்க வேண்டிய உள்ளது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி முன் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆஸ்பத்திரி முன் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்