ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்த்து மாற்று பாதையில் செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?