நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை உள்ள சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இங்குள்ள பழைய தார்ச்சாலையை பெயர்த்தெடுத்து அதில் கற்கள், மண் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தார் போடப்படவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் சென்றால் தூசி பறக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.